மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது முன்வைக்கப்பட்ட பல மில்லியன் டொலர் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மலேசிய நீதிமன்றம் ஒன்று 12 வருடகால சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
பல மில்லியன் டொலர் ஊழல் வழக்குகளில் முதல் ஏழு வழக்குகளிலும் அவர் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டுள்ளார். மேலும் நம்பிக்கை மீறல், பண மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. எனினும் அவர் அதனை மறுத்துள்ளார் .
மலேசியாவின் ஊழலுக்கு எதிரான முயற்சிகளுக்கு முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான வழக்கு பெரும் பரீட்சைக் களமாக அமைந்துள்ளது என்று கூறப்படும் அதேவேளை, குறி
த்த தீர்ப்பு மலேசியாவில் மாத்திரமன்றி உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 வருட சிறைத் தண்டனை மாத்திரமன்றி, 49 மில்லியன் டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான முதல் மலேசியப் பிரதமர் என்ற அடையாளத்தையும் அவர் பெறுகிறார்.
அரசுக்குச் சொந்தமான 42 மில்லியன் ரிங்கிட் பணத்தை தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் வழக்கை விசாரித்த நீதிபதி முகமட் கஸாலி, சந்தேகத்துக்கு இடமின்றி அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்த நஜிப்பிற்கு, அதிகார துஷ்பிரயோகத்திற்காக 12 வருட சிறை தண்டனையும் பண மோசடி நம்பிக்கை மீறல் தொடர்பிலான 6 வழக்குகளில் ஒத்திவைக்கப்பட்ட தலா 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை மாத்திரமன்றி அவர் மீது ,ஒரு கசையடி தண்டனைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் 67 வயதான முன்னாள் பிரதமர் என்ற காரணத்தால் குறித்த கசையடி தண்டனை பிற்போடப்பட்டுள்ளது .
இதேவேளை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என்று நஜீப் குறிப்பிட்டுள்ளார் .
இதேவேளை, உலகின் பல்வேறு நாடுகளில் அரசியல் தலைவர்கள் மீது பண மோசடி , அதிகார துஷ்பிரயோகம் , ஊழல்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவை சரியான வகையில் நிரூபிக்கப்படாமல் போவதால் குறித்த தலைவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர்.
அதுமாத்திரமன்றி சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர் . இவை அனைத்திற்கும் அப்பால் மலேசிய உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தச் சரித்திர முக்கியத்துவம் மிக்க தீர்ப்பு உலகில் வெகுவாக பேசப்படுவது மாத்திரமன்றி பாராட்டப்படும் என்பதிலும் சந்தேகமில்லை.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM