இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் சபை (எஸ்.எல்.சி) தீர்மானித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய காலி வீதி - ஹொரேதுட்டுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், பாணந்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதுடன் , விபத்து தொடர்பில் காரின் சாரதியான கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸ் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் அவர் மீதான வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையிலேயே, குறித்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மெண்டிஸ் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு எதிராக ஒழுங்கு விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை கிரிக்கெட் சபைக்கு அதிகாரம் உள்ள நிலையில், இது போன்ற சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாகவே இவ் ஒழுக்காற்று விசாரணை முன்மொழியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா இழப்பீடாக, வழங்கப்பட்டதுடன் அவர்களுக்கு நிரந்தர வீடு இல்லாததால் குடும்பத்திற்கு ஒரு நிலம் ஒன்றினை வழங்கவும் குசல் மெண்டிஸ் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM