மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக் பதவியில் இருந்தபோது தமது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மலேசிய அபிவிருத்தி சபையின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவர் அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
அரசாங்க நிதி மோசடி தொடர்பில் அவரிடம் சுமார் 16 மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆரம்பமாகிய நிலையில் இன்றையதினம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது.
இதனயைடுத்து அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மீது மலேசிய ஊழல் தடுப்புப்பிரிவினர் நடத்திய சோதனைகளின்போது 273 மில்லியன் டொலர் பெறுமதியான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிஸார், அவருடைய 408 வங்கிக் கணக்குகளையும் முடக்கி வைத்திருந்தனர்.
அரசாங்க நிதியிலிருந்த தொகையைத் நஜிப்பும், அவருக்கு நெருக்கமானவர்களும் சொந்தக் காரணங்களுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
அரசாங்க நிதியிலிருந்து சுமார் 10 மில்லியன் டொலர் தொகையைத் நஜிப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்பட்டது. அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்துவந்த நிலையில் மலேசிய நீதிமன்றம் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM