விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சந்தர்ப்பம்

Published By: Vishnu

28 Jul, 2020 | 06:23 AM
image

50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் இம்முறை சிறுபோகத்தில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு திறைசேரியின் மூலம் 10,400 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை சிறுபோக நெல் அறுவடையில் 200,000 மெற்றிக்தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. 

இதற்கு தேவையான 10,400 மில்லியன் ரூபாவை அரச வங்கிகள் ஊடாக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு வழங்குவதற்கு திறைசேரியினால் தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் நாட்டை கட்டியெழுப்பும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கைக்கு அமைவாக புதிய அரசாங்கத்தினால் கடந்த பெரும்போகத்தில் விவசாயிகளின் நெல் அறுவடைக்காக ஆகக்கூடிய விலையை வழங்கி ஒரு கிலோ நெல்லுக்காக அரசாங்கத்தினால் உறுதிசெய்யப்பட்ட 50 ரூபா விலையின் கீழ் நெல் கொள்வனவு செய்யப்பட்டதுடன் இம்முறை சிறுபோகத்தில் உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் நெல்லை கொள்வனவு செய்வதற்காக நாடு முழுவதிலும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

முன்னைய வருட சிறுபோக மற்றும் பெரும்போகங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ நாட்டரிசி நெல் 38 ரூபாவிற்கும் சம்பா அரிசி நெல் 31 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்பட்டது. புதிய அரசாங்கம் நெல்லை கொள்வனவுசெய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நெல்லுக்காக 50 ரூபா உறுதி செய்யப்பட்ட விலையின் கீழ் மொத்த அறுவடையையும் விற்பனை செய்வதற்கு விவசாயிகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59