(எம்.மனோசித்ரா)
போரின் மூலம் வெற்றிக்கொள்ள நினைத்த கோரிக்களை தற்போது ஜனநாயக போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடைய முயற்சிக்கின்றது. எந்தவொரு சந்தர்பத்திலும் பிரபாகரனின் கோரிக்கைகளை அனுமதிக்கவோ பெற்றுக் கொடுக்கவோ இடமளிக்க போவதில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
போர்காலத்தைப் போன்று பேரழிவானதொரு சூழல் மீண்டும் ஏற்படுவதற்கு தமது அரசாங்கத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வாய்ப்பளிக்கப்பட மாட்டாது. மக்கள் இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றினை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
குருணாகல் - தம்பதெனிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில் ,
நாட்டிலுள்ள இளைஞர் யுவதிகள் டயரால் அடித்து கொல்லப்படும் யுகம் மீண்டும் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் தெளிவான முடிவொன்றை எடுக்க வேண்டும்.
யுத்தத்தின் போது காணப்பட்ட பேரழிவு மிக்க யுகத்தில் சுமார் 60 000 கல்வி கற்ற ஆற்றல் உடைய இளைஞர்களை நாடு இழந்தது. பட்டதாரிகள் பெருமளவானோர் இந்த பேரழிவான சூழலில் கொல்லப்பட்டதோடு அவர்களில் 4,210 பேர் குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அன்று நாட்டில் காணப்பட்ட நிலைமை தொடர்பில் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடளிப்பதற்கும் சாட்சியளிப்பதற்கும் என்னுடன் மேலும் பலர் முன்வந்தனர். எமது அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
விடுதலைப் புலிகள் அமைப்பு வடக்கை கிழக்கையும் வேறுபடுத்தி தனியொரு இராச்சியத்தை கட்டியெழுப்புவதற்காக முயற்சித்தது. எனினும் எமது அரசாங்கத்தால் புலிகளின் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
அன்று யுத்தத்தின் மூலம் பெற நினைத்தும் ஆனால் பெற முடியாமல் போன வியடத்தை ஜனநாயகம் என்ற போர்வையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்போது பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது. ஆனால் பிரபாகரனுடைய கோரிக்கைகளை ஒரு போதும் நாம் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை.
யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு புதிய கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதோடு தொழிற் பயிற்சிகளையும் தொழிநுட்ப கல்வியையும் மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM