நடிகர் விஷால் மற்றும் அவரது தந்தை, அவரின் மேலாளர் ஆகியோருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் அவர், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். கொரோனா அனுபவம் குறித்து டுவிட்டரில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வீடியோவை வெளியிடுகிறேன். இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டியது எனது கட்டாயம்.
எனது தந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை வைத்தியசாலைக்கு நான் அழைத்து செல்லவில்லை. வைத்தியசாலைக்கு எதிராக இருப்பதாக நினைக்க வேண்டாம்.
வீட்டில் வைத்து அவரை கவனித்துக் கொண்டேன். இதனால் எனக்கும் அதே அறிகுறிகள் ஏற்பட்டன. காய்ச்சல், சளி, இருமல் இருந்தது.
எனது முகாமையாளர் ஹரிக்கும் தொற்று ஏற்பட்டது. நாங்கள் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டோம். 4 நாட்களில் காய்ச்சல் மற்றும் அறிகுறிகள் குறைந்தன.
7 நாட்களில் முழுமையாக குணமடைந்தோம். ஆயுர்வேத மருந்தை நான் விற்பதற்காக சொல்லவில்லை. எங்களை எது காப்பாற்றியது என்பதை சொல்ல வேண்டும் என்பதற்காக இதை பகிர்கிறேன்.
நான் எல்லோருக்கும் சொல்வது கொரோனா தொற்று ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் பயப்படாதீர்கள். பயம்தான் நிறைய பேரை இக்கட்டான சூழலுக்கு கொண்டு போயுள்ளது.
கொரோனாவை எதிர்த்து போராடுவேன் என்ற மனத் தைரியத்தில் ஆயுர்வேத மாத்திரை சாப்பிட்டால் சரியாகிடும். எனக்கும் அப்பாவுக்கும் அந்த மன தைரியம் இருந்ததால் ஆபத்தில் இருந்து மீண்டு சாதாரண வாழ்க்கைக்கு வந்து விட்டோம்.”
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM