இந்தியாவில் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால் ராஜூவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நடத்தி வந்த தேநீர் கடை வியாபாரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக நசிந்து போனது. அதனால் அவர் தன் கிராமத்தில் உள்ள 2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட திட்டமிட்டார்.
ஆனால் உழவு இயந்திரம் மற்றும் உழவு மாடுகள் வாடகைக்கு வாங்க பணமில்லாததால் தன் இரு மகளை ஏரில் பூட்டி நிலத்தில் உழவு செய்தார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்த ஹிந்தி நடிகர் சோனு சூட் மனவருத்தம் அடைந்து அவருக்கு உழவு மாடுகள் வழங்க முடிவு செய்தார்.
இது தொடர்பாக தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வயலில் உழவு செய்தவதற்கு விவசாயிக்கு இரு உழவுமாடுகளை தானமாக அளிப்பதாகவும், தந்தைக்கு உதவி செய்த பெண்களை படிப்பில் கவனம் செலுத்துமாறும் கூறியிருந்தார்.
ஆனால் நடிகர் சோனு சூட் உழவு மாடுகளுக்கு பதிலாக உழவு இயந்திரம் வாங்கி கொடுத்துள்ளார் . நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை விவசாயிடம் அந்த உிவு இயந்திரம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
டுவிட்டர் லிங்க் ; https://twitter.com/SonuSood/status/1287317896620802048
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM