கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் நேற்றிரவு(26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
76/1,பேராறு,கந்தளாய் பகுதியைச் 36 வயதுடைய ஏ.றுமைஸ் என்பவரே இவ்வாறு வீட்டுக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
மனைவி இவரை விட்டு பிரிந்த நிலையில் மன நோய்க்குட்பட்டு இருந்த நிலையிலே வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டு அறைக்குள் சென்று கயிற்றினால் கட்டி தூங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், ஆரம்ப கட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM