மஸ்கெலியாவில் தொடரும் கொள்ளை ; 9 கடைகள் உடைப்பு - பீதியில் மக்கள்

Published By: Digital Desk 4

28 Jul, 2020 | 11:00 AM
image

மஸ்கெலியா நகரில் அமைந்துள்ள 9 வர்த்தக நிலையங்கள் நேற்று (26) தொடர்ச்சியாக மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மஸ்கெலியா நகர் முழுவதிலும் உள்ள கடைத் தொகுதிகளில் ஆங்காங்கே சுமார் 9 கடைகளுக்கும் மேல் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உடைக்கப்பட்ட கடைகளில் பெறுமதியான பொருட்கள் எவையும் திருடப்படவில்லையெனவும் சிறிய தொகை பணம், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் சிலவுமே திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மஸ்கெலியாவை சூழ உள்ள பகுதிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் மூன்று வாரங்களுக்கு முன் பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் ஒரே இரவில் எட்டு வீடுகளில் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு, கடந்த இரு வாரங்களுக்கு முன் பொகவந்தலாவை கெக்கஸ்வேல்ட் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்து வீடுகளில் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாகவே நேற்று இரவு மஸ்கெலியா நகரில் 9 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38