மஸ்கெலியா நகரில் அமைந்துள்ள 9 வர்த்தக நிலையங்கள் நேற்று (26) தொடர்ச்சியாக மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா நகர் முழுவதிலும் உள்ள கடைத் தொகுதிகளில் ஆங்காங்கே சுமார் 9 கடைகளுக்கும் மேல் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உடைக்கப்பட்ட கடைகளில் பெறுமதியான பொருட்கள் எவையும் திருடப்படவில்லையெனவும் சிறிய தொகை பணம், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் சிலவுமே திருடப்பட்டுள்ளதாகவும் குறித்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மஸ்கெலியாவை சூழ உள்ள பகுதிகளில் தொடர்ச்சியான கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த வகையில் மூன்று வாரங்களுக்கு முன் பிரவுன்ஸ்விக் தோட்டத்தில் ஒரே இரவில் எட்டு வீடுகளில் கொள்ளையிடப்பட்டுள்ளதோடு, கடந்த இரு வாரங்களுக்கு முன் பொகவந்தலாவை கெக்கஸ்வேல்ட் தோட்டத்தில் தொடர்ச்சியாக ஐந்து வீடுகளில் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாகவே நேற்று இரவு மஸ்கெலியா நகரில் 9 கடைகள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதையடுத்து குறித்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM