உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் தயாரிப்பு நிறுவனமான அப்பிள் மேக் தமது புதிய ஐ - போன் -11 மொடலை இந்தியாவில் உற்பத்திசெய்ய உள்ளதாக இந்தியாவின் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,
“இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன்கள் தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கிறது. அப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன் 11 ஐ தயாரிக்கத் தொடங்கியுள்ளதாகவும் இது இந்தியாவில் முதல் முறையாக தயாரிக்கப்படும் ஒரு சிறந்த மொடல் ஐபோன் என தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு, குபேர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான ஐபோன் XR மொடலை இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு இணைக்கத் தொடங்கியது. 2017 ஆம் ஆண்டில், அப்பிள் ஐ போன் SE மொடல் மற்றும் 2016 மொடலின் உள்நாட்டு உற்பத்தியை பெங்களூர் தொழிற்சாலையில் தொடங்கியது.
இதனிடையே அப்பிள் நிறுவனம் பெங்களூருக்கு அருகிலுள்ள தனது விஸ்ட்ரான் தொழிற்சாலையில் ஐபோன் SE 2020 மொடலையும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அப்பிள் நிறுவனத்தின் ஐ போன் -11 மொடல் சென்னைக்கு அருகில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தாயாரிக்கப்பட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலானவை கொரோனாவுக்கு பின் சீனாவை விட்டு வெளியேறும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM