உலகில் தொழில்நுட்பம் எவ்வளவுக்கு எவ்வளவு வளர்ச்சி கண்டதோ அவ்வளவுக்கு அவ்வளவு பாதிப்புகளையும் ஏற்படுத்த தவறவில்லை.
இன்றைய நவீன உலகில் இளைஞர்கள், யுவதிகள் கைபேசியே கதி எனக் கிடக்கின்றனர் . இதனால் பெற்றோர் - பிள்ளைகளுக்கு இடையேயான பாசம் மற்றும் கல்வி என அனைத்தும் சீரழிந்து போகிறது.
இவை அனைத்துக்கும் மேலாக நமது நாட்டில் அண்மையில் குடும்பஸ்தர் ஒருவர் இரவு பகலாக கைபேசியில் விளையாடி இறுதியில் உயிரையே மாய்த்துக்கொண்ட துயர சம்பவத்தை எவரும் மறந்திருக்க மாட்டார்கள்.
இவை மாத்திரமன்றி உலகில் நடக்கும் போலியான நடவடிக்கைகள் ஏமாற்று வித்தைகள் மற்றும் சமூகங்களுக்கிடையே ஒழுக்கயீனங்கள் இவை அனைத்துக்கும் கையடக்க தொலைபேசிகளும் அதன் மீதான தீராத மோகமுமே காரணமாக அமைகிறது.
இவை ஒரு புறம் இருக்க, வடபகுதி மாணவர்களின் zoom மற்றும் வைபர் வகுப்புகளில் ஒரு சிலர் ஹேக் செய்து ஊடுருவி தேவையற்ற வகையில் செயற்படுவதாக வடபகுதி அதிபர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர் .
அதிபர்களின் கைபேசி இலக்கங்களை ஹேக் செய்து தகவல்களைத் திருடி மாணவர்கள் ஆசிரியர்களுடனும் ஏனையவர்களுடனும் பொருத்தமற்ற தகவல்கள், படங்களை அனுப்பி அதிபர் ஆசிரியர்களின் புனிதத் தன்மைக்கு களங்கம் ஏற்படுத்துவதாக வட பகுதிஅதிபர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வடமாகாண அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்தன் இக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .
எவர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டாலும் அது மன்னிக்க முடியாத குற்றமாகும். நாட்டின் 25 மாவட்டங்களில் இன்று வட பகுதியே கல்வி நடவடிக்கைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது .
அதுமாத்திரமன்றி கடந்த கால யுத்தத்தால் சிதைந்துபோன கல்வி நடவடிக்கைகள் தற்போது மெல்ல தலைதூக்க ஆரம்பித்துள்ளன. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கல்வி நடவடிக்கைகள் பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாக பெற்றோர் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இச் சந்தர்ப்பத்தில் திட்டமிட்டு இவ்வாறு மாணவர்களுக்கு நடக்கும் zoom மற்றும் Viber வகுப்புக்களை குழப்பும் வகையில் எவரும் செயற்படுவார்களேயானால் அது மன்னிக்க முடியாத குற்றம் மாத்திரமல்ல, எதிர்கால சந்ததியின் கல்விச் செயற்பாடுகளை குழிதோண்டி புதைக்கும் முயற்சியாகவே இருக்கும்.
எனவே சம்பந்தப்பட்டவர்களை துரிதமாக கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உயர்ந்த தண்டனை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.
வீரகேசரி இணையத்தள ஆசிரியர் தலையங்கம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM