ஐ.பி.எல். வீரர்களுக்கு நாள்தோறும் கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா வலியுறுத்தியுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறுவது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
“ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற, களத்திலும் களத்துக்கு வெளியேயும் பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும். பாதுகாப்பு விடயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது.
முடிந்த அளவுக்கு அதிக அளவிலும், நாள்தோறும் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நான் கிரிக்கெட் வீரராக இருந்தால் நாள்தோறும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதனால் எந்த தீங்கும் வராது. உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறை என்பது மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும்.
அதனை 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டியில் அமுல்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை. இந்த தொடரில் அணிகள் நிலையாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (பி.சி.சி.ஐ)அறிவுறுத்தலை எதிர்நோக்கியுள்ளோம்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அதற்குரிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அவர்களிடம் உள்ளது. போதுமான பரிசோதனைகள் செய்ய உள்ளூர் அரசாங்கத்தின் உதவி பி.சி.சி.ஐ க்கு தேவைப்படும். இதற்கு முன்பாக நாம் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தி இருந்தாலும், இந்த முறை நாம் நிறைய நடைமுறைகளை கூடுதலாக பின்பற்ற வேண்டியுள்ளது.
இந்த பருவக்காலத்தில் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் முன்பை விட அதிகமானோர் பார்த்து ரசிக்கும் போட்டியாக ஐ.பி.எல். இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நிலையை எட்டவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன்.
அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் அனுசரணையானர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் அணிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை பி.சி.சி.ஐ ஈடுகட்டும் என்று நம்புகிறேன்” என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM