இசையமைப்பாளரும், பாடகரும், நடிகருமான பிரேம்ஜி அமரன் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு 'சத்திய சோதனை' என பெயரிடப்பட்டிருக்கிறது.
இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் புதல்வர்களில் ஒருவரான பிரேம்ஜி அமரன், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமையுடன் வலம் வருகிறார்.
சென்னை-28, மங்காத்தா, பிரியாணி, மாஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இவர், இந்த ஆண்டில் டிஜிட்டல் தளத்தில் வெளியான 'ஆர்கே நகர்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய படத்திற்கு 'சத்திய சோதனை' என பெயரிட பட்டிருக்கிறது.
இந்தப் படத்தை 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தை இயக்கி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்குகிறார். சூப்பர் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் சமீர் பரத் ராம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரேம்ஜி அமரனுக்கு ஜோடியாக 'பிக்பொஸ்: பிரபலம் நடிகை ரேஷ்மா நடிக்கிறார்.
ஆர்.பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ரகுராம் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் மாதவன் வெளியிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM