இந்தியாவின் டெல்லியில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கான தடுப்பு நிலையம் ஒன்றில் 14 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் ஜூலை 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக தெரிக்கப்படும் அதேவேளை, சம்பவம் தொடர்பில், அதே தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 19 வயது இளைஞர் ஒருவரும், குறித்த சம்பவத்தை காணொளியாக பதிவு செய்ததாக கூறப்படும் இன்னொரு நபரும் கடந்த வியாழனன்று கைதுசெய்யப்பட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் 10,000 படுக்கைகள் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த 14 வயது சிறுமியை, அந்த நிலையத்தின் கழிவறையில் வைத்து சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
தனக்கு நேர்ந்த அவலத்தை அந்த சிறுமி தனது உறவினர்களிடம் தெரிவித்ததையடுத்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் இருவரும் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமாகும் வரை தனிமைப்படுத்தல் மையத்திலேயே தங்கவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM