தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 சம்பள உயர்வை உடன டியாக வழங்குவதற்கு அரசாங் கம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என நேற்று சபையில் தொழிலமைச்சர் டபிள்யூ.ஜே.எம்.செனவிரட்ண தெரிவித்தார்.
அதேவேளை கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தொழில் அமைச்சு முன்னெடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று தினேஷ் குணவர்த்தன எம்.பி.யினால் 23 கீழ் இரண்டில் எழுப்பப்பட்ட தோட்டத் தொழிலாளிகளின் ரூபா 2500 சம்பள உயர்வு தொடர்பில் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஜோன் செனவிரட்ண இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தனது பதிலில் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட ரூபா 2500 சம்பள உயர்வை பெரும்பாலான கம்பனிகள் இதுவரையில் வழங்கவில்லை. இது தொடர்பில் பிரதமரின் தலைமையிலான பொருளாதார அலுவல்கள் தொடர்பான முகாமைத்துவ குழுவிலும் கலந்துரையாடப்பட்டது. பெருந்தோட்டக் கம்பனிகளுடனும் கலந்துரையாடப்பட்டது.
தற்போது பெருந்தோட்டத் துறையின் தற்காலிக வீழ்ச்சியைத் தொடர்ந்து வங்கிகள் ஊடாக கம்பனிகளுக்கு கடன்களை வழங்கி ரூபா 2500 சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கூட்டு ஒப்பந்தத்தை கையெழுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பெண் ஊழியர்களுக்கான நலன்புரிகள் சுகாதார சேவைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தி குறைபாடுகள் நீக்கப்படும்.
தொழில் நியாய சபைகளில் உறுப்பினர்களுக்கு தமது பிரதிநிதிகள் ஊடாக விடயங்களை முன்வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM