(செ.தேன்மொழி)
பெருந்தோட்டதுறை மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு செயற்திட்டங்களை தங்களது ஆட்சியில் முன்னெடுப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, அவர்களது நன்றிக் கடனை தீர்க்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸை பெருந்தோட்ட துறை அமைச்சராக நியமிப்பதாகவும் கூறினார்.
பதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஐக்கிய மக்கள் சக்தி சாதாரண மக்களின் நலனை பெற்றுக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. இன்று நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்களிடத்தில் பணம் இல்லை, பிள்ளைகளுக்கு உணவு பெற்றுக் கொடுப்பதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வுப்பெற்றுக் கொடுப்பதற்கு வழியில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடு பூராகவும் சென்று தேவையற்ற பிரச்சினைகளை பேசிவருகின்றார். மக்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பினால் அவர், வேறு சிந்தனையில் இருக்கின்றார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுத் தருவதாக தெரிவித்த 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை இந்த அரசாங்கம் கொடுத்துள்ளதா? நாங்கள் 1500 பெற்று தருவதாக தெரிவித்தோம். அதனை கட்டயாம் செய்வோம். ஜனாதிபதி தேர்தலின் போது நீங்கள் எமக்கு பெற்றுக் கொடுத்த ஆதரவை நாங்கள் மறக்கவில்லை. இதற்கான நன்றிக்கடனை நாங்கள் செலுத்துவோம்.
பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களை தொடர்ந்தும் தொழிலாளர்களாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. உங்களை முன்னேற்றுவதே எமது நோக்கம். ஒரு வருடத்திற்கு எரிபொருள் விலையை மாற்றுவதில்லை என்று அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்து 24 மணித்தியாலயத்தில் எரிப் பொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று பெருந்தோட்ட துறை அமைச்சு பொறுப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ்க்கு பெற்றுக் கொடுப்போம். என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM