கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட, பூவரசந்தீவில் வசிக்கும் ஒருவரின் வீட்டினை இன்று (23) அதிகாலை 3.00 மணியளவில் யானை ஒன்று உடைத்துச் சேதமாக்கியுள்ளது.
சம்பவ நேரத்தில் வீட்டில் இருந்தோர் அவர்களின் உறவினர்களின் வீட்டுக்கு சென்றதால், அவர்கள் அதிஷ்டவசமாக எதுவித ஆபத்துமின்றி தப்பியுள்ளதாக தெரிவித்தனர்.
இவ்வாறு யானைகள் அடிக்கடி ஊருக்குள் உட்பிரவேசித்து சேதம் விளைவிப்பதனால், மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகுவதாக கிராமவாசிகள் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக உரிய அரச அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எதுவித தீர்வும் பெற்றுத் தரவில்லை என, பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளவதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM