(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவர் இரகசிய வாக்கெடுப்பினூடாகவே தெரிவுசெய்யப்படவேண்டும். கட்சியின் யாப்பின் பிரகாரம் அதுமேற்கொள்ளப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தேசிய அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
நுவரெலியா கினிகத்தேன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டுவிட்டு ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைவரை இரகசிய வாக்கெடுப்பொன்றினூடாகவே தெரிவுசெய்யப்பவேண்டும். இரகசிய வாக்கெடுப்பு என்பது முட்டிமோதிக்கொண்டு மேற்கொள்வதல்ல. ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படவேண்டியதொன்றாகும். ஐக்கிய தேசிய கட்சி எப்போதும் ஜனநாயகத்துக்கு மதிப்பளித்துவரும் கட்சியாகும்.
அத்துடன் இரகசிய வாக்கெடுப்பு கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சி பிளவுபடாமல் மேற்கொள்ளப்படும். 2011இல் சஜித் பிரேமதாச கட்சியின் பிரதி தலைவராக தெரிவுசெய்யப்பட்டதும் இரகசிய வாக்கெடுப்பின் மூலமாகும். அப்போது கட்சி பிளவுபடவில்லை. அதனால் இரகசிய வாக்கெடுப்பு என்பது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடியதொன்று அல்ல. மாறாக கட்சி உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிப்பதற்கு இருக்கும் சிறந்த முறையாகும்.
மேலும் மத்திய வங்கி பிணைமுறி மோசடியை திரும்ப திரும்ப வெளிக்கொண்டுவருவது அரசியல் சேறு பூசுவதற்காகும். பிணைமுறி தொடர்பான அறிக்கையொன்று வந்திருக்கின்றது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்திருக்கின்றார். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாகும்.
அதேபோன்று புவனேக்கபாகு மன்னனின் அரச சபை இடிக்கப்பட்டிருப்பது பாரிய குற்றமாகும். இதனை மேற்கொண்ட குருணாகல் நகர பிதா இன்னும் சுயாதீனமாக செயற்படுகின்றார். நாட்டின் கலாசாரம், புராதன சின்னங்களை பாதுகாப்பதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்களே தற்போது அதனை அழித்துவருகின்றனர். அதனால் இதுதொடர்பாக பூரண விசாரணை மேற்கொண்டு குருணாகல் நகரபிதாவை கைதுசெய்யவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM