மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் மன்னார் நகர் மற்றும் அடம்பன் பகுதியில் திடீரென மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் ஆறு வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த வர்த்தகர்களை மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் நேற்று புதன்கிழமை (22) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்றில் முன்னிலையான குறித்த வர்த்தகர்கள் சிலர் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து கோதுமை மா கட்டுப்பாட்டு விலையை மீறி விற்பனை செய்த ஒருவருக்கு 3000 ரூபா அபராதமும், கோதுமை மாவின் விலையை காட்சிப்படுத்தாத இருவருக்கு தலா 1500 ரூபா அபராதமும், சம்பா அரிசியை வைத்துக்கொண்டு விற்பனை செய்யாத குற்றஞ்சாட்டப்பட்ட நபரை ஒரு லட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதுடன், காலாவதியான சவர்க்காரத்தை காட்சிபடுத்திய நபர் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM