கொரோனா பரவல் காரணமாக எகிப்திய சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகிறது.
எகிப்தில் குறைந்தது 14 கைதிகள் சிறைச்சாலைக்குள் உயிரிழந்துள்ளனர். ஜூலை 15 நிலவரப்படி பெரும்பாலும் 10 தடுப்புக் காவல் நிலையங்களில் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் இருக்கலாம் என்று திங்கட்கிழமை ஐ.நா.வின் மனித உரிமைகள் காண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கைதிகள் கொவிட்-19 அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணங்களினால் அவர்களிடையே மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவில்லை.
அறிகுறிகளைக் காட்டும் கைதிகளை தனிமைப்படுத்த அதிகாரிகள் சிறிதும் நடவடிக்கை எடுக்கவில்லை, மேலும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் கடுமையான தகவல்களை இருட்டடிப்பு செய்துள்ளதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், எகிப்திய பத்திரிகையாளர் மொஹமட் மோனீர் கெய்ரோவின் மோசமான டோரா சிறையில் தடுப்புக்காவலில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தார்.
அதேநேரம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளரான அம்ர் மாக்தி அல் ஜசீராவிடம், இதுவரை மூன்று கைதிகள் டோரா தஹிக் சிறையில் கொவிட்-19 காரணமாக இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
அதேபோல் ஜெனீவாவை தளமாகக் கொண்ட நீதிக்கான குழு, எகிப்திய சிறைகளில் கொரோனாவினால் பாதிக்கபட்டோர் என்ற சந்தேகத்தில் 149 பேர் உள்ளதாகவும் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM