கிழக்கு ஆப்கானிஸ்தானில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் தலிபான் போராளிகள் உட்பட மொத்தமாக 45 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
காம் சியாரத் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய இந்த தாக்குதலில் எட்டுப் பொது மக்கள் உயிரிழந்த நிலையில் உள்ளனர், மீதமுள்ள 37 பேரில் எத்தனைபேர் பொது மக்கள், எத்தனைபேர் தலிபான் உறுப்பினர்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று கிழக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான ஹெராட்டின், அட்ராஸ்கன் மாவட்ட ஆளுனர் அலி அஹ்மத் பகீர் யர் கூறினார்.
இதேவேளை ஹெராட்டில் நடந்த இரண்டு வான்வழித் தாக்குதல்களில் எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் என்று தலிபான் செய்தித் தொடர்பாளர் காரி மொஹமட் யூசுப் அஹ்மதி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டு அந் நாட்டு அதிகாரிகளும் இரண்டு சுற்று வான்வழித் தாக்குதல்கள் நடந்திருப்பதை உறுதிப்படுத்தினர்.
இதனிடையே ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அப் பகுதியில் ஆப்கானிய படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM