(இராஜதுரை ஹஷான்)
குருநாகலை புவனேக ஹோட்டல் நடத்தப்பட்ட கட்டிடம் சேதமாக்கப்பட்ட விவகாரத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்களை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்த வேண்டும். கட்டிடத்தை புனரமைப்பதற்கான வசதிகளை பொறுப்புக் கூற வேண்டியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டும். என பிரதமரால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினர் அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்கள்.
குருநாகலை புவனேக ஹோட்டல் நடத்தி செல்லப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கை இன்று புதன் கிழமை அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. அறிக்கையில் 5 பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தின் முன்பகுதியிற்கும்இ ஜன்னல் பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை தொல்பொருள் மரபுரிமை அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டியது. கட்டிடத்தில் பிற்பகுதி முழுமையாக சேதமடைந்துள்ள நிலையிலும், அங்கிருந்த புராதான பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பில் இதற்கு முன்னர் தொல்பொருள் திணைக்களத்தினால் விரிவாக அறிக்கைப்படுத்தப்பட்டுள்ளதால் கட்டிடத்தை மீண்டும் புனரைக்க கூடிய சாத்தியப்பாடு காணப்படுகின்றன. புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
இக்கட்டிடத்தை தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
இக்கட்டிடம் அமைந்துள்ள பகுதியை விரிவாக்க கொண்டுவரப்பட்ட யோசனையில் திருத்தம் கொண்டு வருமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஆலோசனை வழங்குதல்.
கட்டிடத்தை சேதமாக்கியவர்கள் தொடர்பில் பொறுப்பு கூ ற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தல்.
இக்கட்டிடத்தை சேதமாக்கியமைக்கு பொறுப்பு கூற வேண்டிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடமிருந்து அதனை மீள புனரமைப்பதற்கான வசதிகளை பெற்றுக் கொள்ளல்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தலைமையில் ஐவர் அடங்கிய கு ழு கடந்த வாரம் நியமிக்கப்பட்டது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM