பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் கல்குடாவ பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (21) இரவு இடம்பெற்ற வீதிவிபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கற்பிட்டி தலவில பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் இடம்பெற்ற செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் பாலாவி பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கல் ஒன்று எதிரே வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபர் இவ்விபத்தில் படுகாயமடைந்ததுடன், அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்து சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் தொர்பில் கற்பிட்டி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM