நைஜீரியாவின் வடக்கு மாநிலமான கடுனாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பத்து பேர் உயிரழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளன.
கடுனாவின் ஜாங்கோ-கட்டாஃப் பகுதியின் கோரா கன் கிராமத்தில் ஆயுதமேந்திய துப்பாக்கிதாரிகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் 7 வயது குழந்தையும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நைஜீரிய கிறிஸ்தவ சங்கத்தின் உள்ளூர் துணைத் தலைவர் ஐசக் அங்கோ-மாகமாவை மேற்கோள் காட்டிய, செய்தி நிறுவனம் தாக்குதலில் பல வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் கூறுகிறது.
எந்தவொரு ஆயுதக் குழுவும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை, ஆனால் கிராமங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் போகோ ஹராம் போர்க் குணமிக்க குழுவின் வழக்கமான செயற்பாடு என்றும் குறிப்பிடப்படுகிறது.
ஜூலை 9 ஆம் திகதி, போர்னோ மாநிலத்தில் டம்போவா நகருக்கு அருகே நடந்த போகோ ஹராம் தாக்குதலில் குறைந்தது 20 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஒரு சிலர் காயமடைந்தனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, போகோ ஹராம் மேற்கத்திய கல்வி முறையை அகற்றுவதற்கும் நைஜீரியாவில் ஷரியா சட்டத்தை நிறுவுவதற்கும் பொதுமக்களை குறிவைத்து வன்முறை யுத்தத்தை முன்னெடுத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM