நாட்டில் கடந்த 24 மணிநேரக் காலப் பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்று கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போதைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,730 ஆகவும், நேற்றைய தொற்றுக்குள்ளான ஏழுவர் தினம் கொரோனா குணமடைந்த நிலையில் குணமடைந்தவர்களின் தொகையும் 2,048 ஆக உயர்வடைந்துள்ளன.
ஒரு வெளிநாட்டவர் உட்பட 671 கொரோன தொற்று நோயாளிகள் தற்போது வைத்திய சிகிச்சை பெற்று வருகின்றனர், அதேநேரத்தில் கொரோனா தொற்று தொடர்பான சந்தேகத்தின்பேரில் 94 பேரும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.
இன்று காலை 6 மணி நிலவரப்படி, கந்தகாடு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை நிலையத்தில் இதுவரை 561 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்த தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 257 நபர்கள் இன்று வெளியேற்றப்படுவார்கள்.
COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையம், 25,074 நபர்கள் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை முடித்துள்ளனர்.
அதே நேரத்தில் 5,222 பேர் முத்தரப்பு படைகளால் கண்காணிக்கப்படும் 51 நிலையங்களில் தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
பெப்ரவரி 18 ஆம் திகதிமுதல் மொத்தம் 141,515 சோதனைகளுடன் 1,100 பி.சி.ஆர் சோதனைகள் நேற்று நடத்தப்பட்டதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM