தபால் மூல வாக்களிப்பு : மேலும் இரண்டு தினங்கள் நீடிப்பு!

21 Jul, 2020 | 09:21 PM
image

2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பினை பதிவுசெய்ய மேலும் இரண்டு தினங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே வழங்கப்பட்ட தினங்களில், தபால் வாக்குகளை பதியசெய்ய முடியாமல் போனவர்கள் ஜூலை 24 & 25 ஆகிய தினங்களில் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.

அதன்படி, 24 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரையும் 25 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையும் வாக்குகளை பதிவு செய்ய முடியும்.

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பணிகளானது கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி, 14, 15, 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் இடம்பெற்றிருந்தது. 

எனினும் குறித்த தினத்தில் வாக்கினை பதிவுசெய்ய தவறவிட்ட அதிகாரிகளின் நலன் கருதி நேற்றும் இன்றும் வாக்கினை பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்த நிலையில் மேலும் இரண்டு தினங்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா அச்சம் காரணமாக அநுராதபுரம், ராஜாங்கனை பிரதேச செயலர் பிரிவில் தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

இம்முறை பொதுத் தேர்தலுக்கு மொத்தமாக 705,085 தபால் மூல வாக்காளர்கள் வாக்கினை அளிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13