மக்களை பலிகொடுத்தேனும் வாழ நினைக்கும் அரசால் பொருளாதார போரை வெற்றிகொள்ள முடியாது - ரணில்

Published By: J.G.Stephan

21 Jul, 2020 | 03:31 PM
image

(நா.தனுஜா)

முழு உலகமும் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப்போரில் வெற்றியடையக்கூடிய ஆற்றல் அரசாங்கத்திற்கு இல்லை. சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள் கொரோனா வைரஸ் பரவலினால் நெருக்கடிக்கு முகங்கொடுத்த தமது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கிக்கொண்டிருக்கும் அதேவேளை, எமது அரசாங்கம் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கின்றது.

சர்வதேச நாடுகள் தமது மக்களின் நலன்களை முன்நிறுத்தி செயற்பட்டுக்கொண்டிருக்கும் தருணத்தில், எமது அரசாங்கம் மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க கடுமையாகச் சாடியிருக்கிறார்.



அவர் மேலும் கூறியிருப்பதாவது,

தற்போதைய அரசாங்கத்தினால் பொருளாதாரப்போரில் ஒருபோதும் வெற்றியடைய முடியாது. சுற்றுலாத்துறையையும், ஏற்றுமதியையும் அரசாங்கம் முழுமையாக மறந்துபோயிருக்கிறது.

அரச சேவையாளர்களுக்கான ஊதியத்தில் குறைப்புச் செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலினால் முழு உலகமுமே ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கிறது.

ஏனைய சர்வதேச நாடுகள் அந்த நெருக்கடியிலிருந்து தமது பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும், அதுவரையில் மக்களுக்கு அவசியமான நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆனால் எமது நாட்டின் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது? அவுஸ்திரேலிய அரசாங்கம் அனைத்துக் குடும்பங்களுக்கும் நிவாரணமாக 3000 டொலர்களை வழங்கியது.

மக்கள் குறித்து சிந்திக்கின்ற, அவர்களுடைய நலன்களை முன்நிறுத்துகின்ற அரசாங்கம் இவ்வாறுதான் செயற்படும். ஆனால் எமது நாட்டில் நீர் மற்றும் மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டது. மக்களின் உயிர் பிரிந்தாலும் தாம் வாழவேண்டும் என்றே அரசாங்கம் நினைக்கின்றது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47