(செ.தேன்மொழி)
வலஸ்முல்ல பகுதியில் துப்பாக்கி மற்றும் இராணுவத்தின் சீருடைகளை வைத்திருந்ததாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வலஸ்முல்ல - தெற்கு போவல்ல பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாலை , பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இதன்போது குறித்த பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவரிடமிருந்து வெளிநாட்டு துப்பாக்கி , உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி , 103 ரி 56 ரக தோட்டக்களும் , இதே வகையைச் சேர்ந்த பயிற்சி 21 பயிற்சி தோட்டாக்களும், வாள் , கத்தி உள்ளிட்ட பல கூரிய ஆயுதங்களும் மற்றும் இராணுவத்தினரின் சீருடைகள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை வலஸ்முல்ல பொலிஸாருக்கு ஒப்படைத்துள்ளதுடன் , பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM