( எம்.எப்.எம்.பஸீர்)
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், 29பேருக்கு எதிராக தேர்தல் விதிமுறை, சட்டமீறல் தொடர்பில் முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேர்தல்கள் கடமைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
இந்த 29 பேரில், 3 வேட்பாளர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம், குருணாகல், புத்தளம் மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்கள் மூவரே இவ்வாறு பொலிசாரால் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களாவர்.
இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இரு பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட 5 பொலிசாருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
ஜா எல, பொலன்னறுவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளே தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள பொறுப்பதிகாரிகளாவர்.
அவர்கள் குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு வேறு இடங்களில் சாதாரண கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனைவிட நடவடிக்கை எடுக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களில் அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM