மக்களின் மனங்களை வென்றதாலேயே மக்களால் தொடர்ந்து தெரிவு செய்யப்படுகிறேன்: பிரதமர் மஹிந்த

Published By: J.G.Stephan

20 Jul, 2020 | 11:24 AM
image

(இராஜதுரை ஹஷான்)
மக்களால் வெறுக்கப்பட்ட  அரசியல்வாதிகள் தேசிய பட்டியல்  ஊடாக பாராளுமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள். மக்களின் மனங்களை வென்றதால், மக்களால் தொடர்ந்து  தெரிவு செய்யப்படுகிறேன். ராஜபக்ஷர்கள் மீது கொண்ட  நம்பிக்கையின் காரணமாகவே  மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு ஆணையை வழங்கியுள்ளார்கள் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 மொனராகலை - மெதகம பிரதேசத்தில்  இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

  இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை  கைப்பற்றுவது, எமது பிரதான  இலக்கு. மக்களால் வெறுக்கப்பட்ட  அரசியல்வாதிகள்  தேசிய பட்டியல் ஊடாக  இம்முறை  பாராளுமன்றத்திற்கு செல்ல முயற்சிக்கிறார்கள். இத்தன்மையினை   இரண்டு பிரதான  எதிர்க்கட்சிகளிலும் காணலாம்.  இக்கட்சிகள் தொடர்பில் மக்கள்  கவனம் செலுத்த  வேண்டும்.

 மக்களுக்கு சேவையாற்றாத அரசியல்வாதிகளுக்கு மக்கள்  ஆதரவு வழங்குவது  பயனற்றது.  மக்களின் பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுபவர் மக்களின் தேவைகளை  நிறைவேற்ற வேண்டும். மக்களின் மனங்களை வென்றதால் தொடர்ந்து போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகுகிறேன்.

  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறிய  பிறகு   மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுனவை  உருவாக்கினோம். புதிய கட்சியுடன்  ராஜபக்ஷர்களின் அரசியல் முடிவடையும் என  அப்போதைய ஆளும் தரப்பினர்கள்  குறிப்பிட்டார்கள். ஆனால் மக்கள் எங்களை கைவிடவில்லை. 2015ம் ஆண்டுக்கு பிறகு  அரசியல் ரீதியான தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டன.

   2018ம் ஆண்டு இடம் பெற்ற உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றது.   இடம் பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும்  வெற்றிப் பெற்று   ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. தற்போது பொதுத்தேர்தலில் எதிர்கட்சிகளை தவிர்த்து  ஏனைய கட்சிகளுடன்  கூட்டணியமைத்து  போட்டியிடவுள்ளோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை  கைப்பற்றுவதே  பிரதான  இலக்கு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58