இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை ஏற்றுக்கொண்டிருந்தால் நாம் எதனையும் இழக்காது சுயநிர்ணய உரிமையை தற்போது பெற்று இருப்போம் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பளை பகுதியில் இன்றைய தினம் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டம் இடம் பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நான் வாக்கு கேட்பது எனக்காக அல்ல உங்களுக்காக நாங்கள் ஓர் காலத்தில் ஆயுதம் தூக்கினோம் காரணம் ஆயுத போராட்டத்தின் மூலம் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று கொள்ளலாம் என்று ஆனால் அது பிழைத்துவிட்டது.
ஏன் என்றால் சகோதர இனத்தின் படுகொலை இயக்கங்களுக்கு இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் இயக்கங்களிற்குள் ஏற்பட்ட பிரச்சனைளை தீர்த்து கொண்ட முறைமை மூலமாக எமது போராட்டம் பலவீனம் அடைந்து திசை திரும்பி போய்விட்டது.
அந்த வகையில் நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்ததை ஏற்றுக்கொள்ளவேண்டி வந்தது அதனை நாங்கள் பொன்னான வாய்ப்பாக தான் கருதுகின்றோம்.
அன்று அந்த வாய்ப்பை பயன்படுத்தி இருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்று இருக்கலாம் அதனை ஏற்றுக்கொள்ளாததால் தான் அனைத்தையும் தற்போது இழந்துள்ளோம். என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM