(எம்.மனோசித்ரா)
பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு கடந்த வாரம் நிறைவு பெற்றிருந்த நிலையில், அப்போது வாக்களித்த தவறியவர்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது.
எனினும் நாளையும் நாளை மறுதினமும் அத்தாட்சி அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகத்திலேயே வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் நாளையும் நாளை மறுதினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதோடு சுய தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அரச அதிகாரிகளுக்கு ஒகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வாக்களிக்க விஷேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காராணமாக சுய தனிமைப்படுத்தல் அல்லது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டோரில் அரச ஊழியர்களும் உள்ளடங்குவதால் தபால் மூல வாக்களிப்பில் சற்று சிக்கல் உள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM