உயர்தரம், புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் நாளை அறிவிப்பு

Published By: Digital Desk 4

19 Jul, 2020 | 03:17 PM
image

(எம்.மனோசித்ரா)

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றுக்கான புதிய திகதிகள் நாளை அறிவிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழக்கப் பெரும தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. இதனால் உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை என்பவற்றை ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே தீர்மானித்திருந்தது.

அதற்கமைய கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்தும் பரீட்சைகள் கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. இதன் போது க.பொ.த உயர்தரப்பரீட்சைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும் ஐந்தாம்தரப் புலமைப்பரிசில் பரீட்சையினை செப்டெம்பர் 13 ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கமைய உயர்தர பரீட்சைகளை ஆரம்பிப்தற்காக தினம் குறித்து ஆராய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது. 

இந்நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட சுமூகமற்ற நிலைமையைக் கருத்திற் கொண்டு மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் சுகதாரத்துறையினருக்கும் இடம்பெற்ற பரந்துபட்ட கலந்துரையாடலில் பாடசாலைகளுக்கு மேலும் ஒரு வார காலம் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு நாளைய தினம் உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான புதிய தினங்களை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46