2 ஆம் புவனேகபாகு மன்னனின் அரச மண்டபத்தை உடைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குருநாகலில் ஆர்பாட்டம்

Published By: Digital Desk 3

18 Jul, 2020 | 05:32 PM
image

(செ.தேன்மொழி)

குருநாகல் இராசதானிக்கு சொந்தமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த அரச மண்டபத்தை இடித்து சேதம்படுத்தியமைக்கு கண்டனம் தெரிவித்தும் , இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டறிந்து உடனடியாக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தும் வகையில் ஆர்பாட்டமொன்று இடம்பெற்றது.

குருநாகல் நகரத்தில் அமைந்துள்ள இரண்டாம் புவனேகபாகு மன்னனுக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் அரச மண்டபமே இவ்வாறு இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களாள் இன்று சனிக்கிழமை குருணாகல் நகரில் ஆர்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான நளின்பண்டார , அசோக்க அபேசிங்க உள்ளிட்ட பலரும் , தேரர்களும் , பிரதேசவாசிகள் பலரும் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதுடன், உடைக்கப்பட்ட மண்டபத்தின் முன்னாள் உள்ள வீதியில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆர்பாட்டகாரர்கள், 'எமது உரிமைகளை பாதுகாக்க மக்களே முன்நோக்கி வாருங்கள்' ,'ஜனாதிபதி அவர்களே செவிமடுங்கள் எமது உரிமைகளை பாதுகாத்து தாருங்கள்',' 'பொய்மையான ஆணைக்குழு எமக்கு தேலையில்லை' என்று கோசம் எழுப்பியதுடன், 'ஜனாதிபதி பிரதமர் அமைதியாக இருப்பது ஏன்','தேசப்பற்றுள்ள 69 இலட்சம் போரும் எங்கே?','இப்போது நலமா?' போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.

பின்னர் ஆர்பார்ட்ட காரர்கள் அனைவரும் கோசங்களை எழுப்பியவாறு குருநாகல் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றதுடன். கட்டிட உடைப்பு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு முறைபாடும் அளித்தனர்.

இதன்போது சம்பவம் தொடர்பில் ஏற்கனவே முறைபாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் , விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆர்பாட்டதார்களுக்கு பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் ஆர்பாட்டகாரர்கள் அங்கிருந்துச் சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08