பாராளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிலிருந்து தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் விலகிக் கொள்வதாக அறிவித்தமையையடுத்து அந்த வெற்றிடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான சுஜீவ சேனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தான் ஏற்கனவே பாராளுமன்ற சபாநாயகரின் சபை தலைமைக்குழு, பொது குழு, மனிதவள அபிவிருத்தி மற்றும் கல்வி ஆகிய அமைச்சுகளின் கண்காணிப்பு குழு ஆகியவற்றில் உறுப்பினராக செயற்படுவதானால் இவை தொடர்பிலான செயற்றிட்டங்களை உரியவாறு முன்னெடுக்கும் நோக்கத்தின் அடிப்படையில் கோப் குழுவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனிடையே கோப் குழுவில் சட்டத்தரணி ஒருவரை கட்சியின் சார்பில் பிரதிநிதித்துவம் செய்வது பொருத்தமானது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பரிந்துரை செய்தமைக்கமைய சட்டதரணி சுஜீவ சேனசிங்க இதற்கு நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான கடிதமும் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்றத்தின் பொது முயற்சியாண்மைக்கான பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்கு என்னுடைய பெயரை பரிந்துறை செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருந்தார். ஊழல் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் ஆர்வம் உள்ளது. அந்தவகையில் கோப் குழுவானது தற்போது மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணைமுறி விற்பனை தொடர்பிலான விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றது. கோப் குழுவின் இந்த விசாரணைகளுக்கு என்னால் முடிந்த முழு ஒத்துழைப்புகளை வழங்குவேன் என சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM