( எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பில் தன்னை கைதுசெய்ய எடுக்கப்படும் முயற்சிகளுக்கு தடை விதிக்குமாறு கோரி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளார்.
சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின், விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் 3 விசாரணை அறையின் பொறுப்பதிகாரி ரவீந்ர விமலசிறி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி, அதன் பணிப்பாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வேதசிங்க,பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே, இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவினை ரிஷாத் பதியுதீன் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவில், உருவாக்கப்பட்ட சாட்சிகளை மையப்படுத்தி, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அடிக்கடி மேற்கொள்ளப்படும் விசாரணைகளாலும், கைதுக்கான முயற்சிகளினாலும் தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல்கள் தனக்கு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில், இன்றைய தேர்தல் சூழலில் பல வேலைப்பாடுகள் உள்ளன. அடிக்கடி என்னைக் கைது செய்வதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவது, உள ரீதியாகத் தன்னைச் சோர்வடைய வைத்துள்ளது.
மேலும், தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ளதால், பல கூட்டங்களிலும் பங்கேற்க வேண்டியுள்ளது.
இதற்கு முன்னரும் அடிக்கடி என்னை விசாரணைக்கு அழைத்தனர். கடைசியாக பத்து மணி நேரம் நான் விசாரிக்கப்பட்டேன்.
இவ்வாறான செயற்பாடுகளால் எனது பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தப்படுவதாகவே நான் உணர்கிறேன். எனவே, இந்தக் கைது முயற்சிகளைத் தடுத்து நிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த காலத்தில், கைத்தொழில் அபிவிருத்தி சபையூடாக "கொலொஸஸ்" நிறுவனத்திற்கு செப்பு விநியோகித்தமை தொடர்பில் அப்போது அமைச்சின் கீழ் இருந்த நிறுவனமொன்றின் நடவடிக்கைகளை மையப்படுத்தி இக்கைது முயற்சிகள் இடம்பெறுகின்றன.
எனவே இந்த மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த விவகாரத்தில் என்னை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்க வேண்டும்.
அத்துடன் பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்புவதுடன், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாரும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன் 5 கோடி ரூபா நட்ட ஈடும் கோரப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM