(எம்.எப்.எம்.பஸீர்)
அனுமதிப்பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களை உடனடியாக கைது செய்யுமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மண் மற்றும் மணலை கொண்டு செல்ல விதிக்கப்பட்டிருந்த அனுமதிப் பத்திர முறைமை அமைச்சரவை பத்திரம் ஒன்றினூடாக நீக்கப்பட்டமையை ரத்து செய்யுமாறு கோரி சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான பரிசீலனையின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக செலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க, 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுற்றாடல் சட்டத்திற்கமைய, மணலைக் கொண்டு செல்வதற்கு அனுமதிப்பத்திரம் அவசியமெனவும், அமைச்சரவைப் பத்திரத்தினூடாக அந்த அனுமதிப்பத்திர முறைமை இரத்து செய்யப்பட்டுள்ளது என்ற நிலைப்பாடு தவறான புரிதலால் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதனைக் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் மற்றும் நீதிபதி ரோஹித ராஜகருணா ஆகியோர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு அனுமதிப் பத்திரமின்றி மணலைக் கொண்டு செல்பவர்களைக் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.
சுற்றுச் சூழல் நீதிக்கான மையம் தாக்கல் செய்துள்ள குறித்த மனுவில், பிரதிவாதிகளாக அமைச்சர் எஸ்.எம். சந்ரசேன உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும், சுரங்கம் மற்றும் பூ சரிதவியல் பணியகம், பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இம்மனு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM