மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டபோது கொள்ளையர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் வீடு ஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்ற கொள்ளையர் மீது தாக்கியபோது கொள்ளையரில் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற மற்றைய கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையர் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் சம்பவதினமான நேற்று பிறிதொரு வீடு ஒன்றில் கொள்ளையடித்துவிட்டு மற்றுமொரு வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM