மங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடக்கு ஆசியாவில் அதிகளவில் காணப்படும் பெரிய கொறித்துண்ணிகளான மர்மோட்டில் இருந்து பிளேக் நோய் பரவுவதாக சுகாதாரத்துறை எச்சரித்துள்ள நிலையில் அவற்றை வேட்டையாடவும் உண்ணவும் மங்கோலியா அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், கோபி-அல்தாய் மாகாணத்தின் புபோனிக் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்த நிலையில் அவனுடன் தொடர்பில் இருந்த 15 பேரும் மர்மோட் உண்ட மேலும் 2 இளைஞர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மங்கோலியா அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் வடக்கு பிராந்தியமான இன்னர் மங்கோலியாவில் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளி முன்னேற்றம் அடைந்து வருவதாக சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோயாளியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 15 பேர் ஞாயிற்றுக்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டதாக சின்ஹுவா தெரிவித்துள்ளது. அரசாங்கம் தனது உயர்மட்ட அவசரகால நிலையை முடிவுக்குக் கொண்டுவந்தது என்றார்.
முன்னதாக ஒரு உத்தியோகபூர்வ அறிவிப்பில், இன்னர் மங்கோலியாவின் பயன்னூர் பிராந்தியத்தில் பொதுமக்களுக்கு மர்மோட் சாப்பிடுவதைத் தவிர்க்கவும், இறந்த விலங்குகள் குறித்து புகாரளிக்கவும் 2020 இறுதி வரை நீடிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM