(நா.தனுஜா)
பொதுத்தேர்தலின் போது இடம்பெறக்கூடிய மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கும், அவைகுறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்குமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட பிரிவொன்றை நிறுவியிருக்கிறது.
2020 பொதுத்தேர்தல் காலகட்டத்தில் அதனுடன் தொடர்புடைய வகையில் அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலேயே புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் விசேட அலகினால் ஏற்றுக்கொள்ளப்படும்.
பொதுமக்கள் 24 மணிநேர துரிதசேவையான 1996 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக மனித உரிமை மீறல்கள் குறித்த முறைப்பாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நிறுவப்பட்டுள்ள விசேட பிரிவிற்குச் செய்யமுடியும்.
மனித உரிமை மீறல்கள் பற்றிய முறைப்பாடுகளை எழுத்துமூலமாக முன்வைக்க விரும்பும் பட்சத்தில் அலகுக்குப் பொறுப்பான அதிகாரி, தேர்தல் முறைப்பாட்டைப் பெற்றுக்கொள்ளும் அலகு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இலக்கம் 14, ஆர்.ஏ.த.மெல் மாவத்தை, கொழும்பு 04 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க முடியும்.
அத்தோடு அந்த எழுத்துமூலமான முறைப்பாடுகளை 011 2505574 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது iihrcsrilanka@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பிவைக்க முடியும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM