நோர்வே தலைநகர் ஒஸ்லோவுக்கு 80 கி.மீ தெற்கே உள்ள சர்ப்ஸ்போர்க் நகரில் நேற்று இரவு இடம்பெற்ற கத்திகுத்து தாக்குதலில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலை நடத்திய 31 வயதுடைய நோர்வே பிரஜை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலை நடத்திய சந்தேக நபர் இரண்டு பெண்களுடன் உறவு கொண்டிருந்துள்ளார் எனவும், ஆனால் உயிரிழந்துள்ள பெண்ணுடன் உறவு கொண்டிருக்கவில்லை இல்லை எனவும் ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த மற்றொரு பெண் ஆபத்தான நிலையிலும், மேலும் ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவரின் மன நலம் தாக்குதல்களுக்கு ஒரு காரணியா என்று விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM