கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக நாட்டை முடக்கியதுடன் தனது எல்லைகளை மூடிய மாலைதீவு மீண்டும் தனது எல்லையை திறந்துள்ளது.
இதன் முதல் நடவடிக்கையில், கட்டார் ஏர்வேஸ் விமானம் 107 வெளிநாட்டுப் பிரஜைகளையும் 27 மாலைதீவு பிரஜைகளையும் ஏற்றிகொண்டு நேற்று புதன்கிழமை காலை மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தது.
மார்ச் 27 அன்று மாலைதீவு தனது எல்லைகளை மூடியதிலிருந்து இது சுற்றுலாப் பயணிகளின் முதல் வருகையாக பதிவாகியுள்ளது.
இது குறித்து மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் சோலிஹ் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டிருந்தார்.
குறித்த பதிவில்,
,
“மாலைதீவில் சூரியன் மீண்டும் பிரகாசிக்கிறது. எங்கள் எல்லைகள் மீண்டும் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. முதல் விமானம் தரையிறங்கியது. ” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாலைதீவில் 2,801 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 2,302 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் மரணமடைந்துள்ளனர். அண்மையான காலப்பகுதியில் புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM