தியத்தலாவையில் இரு இராணுவ வீரருக்கு கொரோனா

Published By: Digital Desk 3

15 Jul, 2020 | 04:53 PM
image

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தியத்தலாவைக்கு வந்திருந்த இராணுவத்தினர் இருவர், தமக்கான உடைகளை தியத்தலாவை தையல் நிலையமொன்றில் கடந்த 11 ஆம் திகதி தைத்துச் சென்றிருந்தனர்.

இவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த தியத்தலாவை தையல் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் ஏழு பேரையும் இன்று (15.07.2020) மாலை 2.30 மணியளவில் பதுளை அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அவர்கள் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது. 

இப் பரிசோதனை நிறைவுற்றதும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துவதற்கு அல்லது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்புவது குறித்தும் தீர்மானிக்கப்படுமென்று பதுளை அரசாங்க வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர். 

அத்துடன் இராணுவ இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அம் மூவருடன் தொடர்புடைய 116 பேர் பதுளை பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கொரோனா தொற்றுக்குள்ளான  மூவரும் பசறை, பதுளை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களாவர்.

இவர்கள் விடுமுறை பெற்று தமது வீடுகளுக்கு வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33