கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தியத்தலாவைக்கு வந்திருந்த இராணுவத்தினர் இருவர், தமக்கான உடைகளை தியத்தலாவை தையல் நிலையமொன்றில் கடந்த 11 ஆம் திகதி தைத்துச் சென்றிருந்தனர்.
இவ்விருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த தியத்தலாவை தையல் நிலையத்தின் உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் ஏழு பேரையும் இன்று (15.07.2020) மாலை 2.30 மணியளவில் பதுளை அரசாங்க வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அவர்கள் இன்று மாலை பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
இப் பரிசோதனை நிறைவுற்றதும் அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்துவதற்கு அல்லது அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்புவது குறித்தும் தீர்மானிக்கப்படுமென்று பதுளை அரசாங்க வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இராணுவ இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டுபிடிக்கப்பட்டு அம் மூவருடன் தொடர்புடைய 116 பேர் பதுளை பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளான மூவரும் பசறை, பதுளை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களாவர்.
இவர்கள் விடுமுறை பெற்று தமது வீடுகளுக்கு வந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM