இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் சிவனுக்கு இந்த ஆண்டிற்கான வோன் கார்மான் விருது வழங்கப்பட இருக்கிறது.
இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மைய தலைவராக பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த சிவன் அவர்களுக்கு, விண்வெளித் துறையில் உயர்ந்த விருதாக போற்றப்படும் 'வோன் கார்மான்' விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்.
2020 ஆம் ஆண்டிற்கான இந்த விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் ஆவார். இதற்கு முன் இந்த விருதை பேராசிரியர் உடுப்பி இராமச்சந்திர ராவ் அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டில் டாக்டர் கிருஷ்ணசுவாமி கஸ்தூரிரங்கன் அவர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரோ தலைவராக செயல்பட்டு வரும் வானியல் விஞ்ஞானி சிவன் பி.எஸ்.எல்.வி ராக்கெட் மற்றும் சந்திராயன்-2 ஆகிய திட்டப் பணிகளில் முழுமையான பங்களிப்பை வழங்கியவர்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெறும் விழாவில் திரு சிவன் அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும் என இன்டர்நேஷனல் அகாடமி ஆஃப் ஏரோநாட்டிக்ஸ் எனப்படும் சர்வதேச வானியல் அகாடமி தெரிவித்திருக்கிறது.
வோன் கார்மான் விருதை பெறும் தமிழகத்தை சேர்ந்த வானியல் விஞ்ஞானி சிவனுக்கு, பல்வேறு துறை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM