2020 பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப் பதிவின் மூன்றாம் நாள் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இம்முறை 705,085 வாக்காளர்கள் தேர்தலுக்கான தபால் மூல வாக்குகளை அளிக்க தகுதியுடையவர்கள்.
மாவட்ட செயலகங்கள், மாவட்ட தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்கள், பாதுகாப்பு படைகள் முகாம்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலகங்கள் தவிர அனைத்து பொது நிறுவனங்களின் ஊழியர்களும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தபால் மூல வாக்குப் பதிவுகளை செய்ய முடியும்.
திங்களன்று சுகாதார மருத்துவ அலுவலகங்களில் பணியாளர்கள் தங்களது அஞ்சல் வாக்குச்சீட்டைப் பதிவு செய்திருந்தனர்.
COVID-19 நெருக்கடியைக் கட்டுப்படுத்த வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தாபல் மூல வாக்காளர்கள் சமூக இடைவெளியை பராமரிக்கவும், முகக் கவசத்தை பயன்படுத்தவும், வாக்குச் சாவடிக்குள் நுழையும்போது கைகளைத் தூய்மைப்படுத்தவும், வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவின் போது தங்கள் வாக்குச்சீட்டைக் குறிக்க பேனாவை கொண்டு வருமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தபால் மூல வாக்களார்கள் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததும் தமது சரியான அடையாளத்தை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM