கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் ஊடாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவர்களில் 419 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலும், 11 பேர் சேனாபுரா மறுவாழ்வு மையத்திலும் உள்ள கைதிகள் எனவும், 63 பேர் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையதில் பணிபரியும் ஊழியர்கள் எனவும் மேலும் 16 பேர் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளரை தொடந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில், அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கான நிலையில் இனம் காணப்பட்டனர் இதனையடுத்து அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் உள்ளடங்களாக இதுவரை 519 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
800 க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இவ் எண்ணின்கை மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்டுகின்றது.
இதேவேளை, நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 29 கொரோனா தொற்றாளையடுத்து மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,646 ஆக உயர்வடைந்துள்ளது.
கொரோனா 654 கொரோனா தொற்றாளர்கள் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தின்பேரில் 112 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,981 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும் பதிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM