( எம்.எப்.எம்.பஸீர்)
தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாதாள உலகத் தலைவன் கஞ்சிபானை இம்ரான் என அறியப்படும் மொஹம்மட் நாஜிம் மொஹம்மட் இம்ரான், தன்னை அங்கிருந்து வேறு சிறைக்கு மாற்றுமாறு அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றினை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். சட்டத்தரணி கே. தனுஷ்க லக்மால் ஊடாக அவர் இந்த மனுவினை தாக்கல் செய்துள்ளார்.
தனக்கு பாதாள உலகத்தினர் மற்றும் தற்போதுள்ள சிறைச்சாலைக்குள்ளேயே உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும், அதனால் தனது உயிருக்கு பாதுகாப்பு உத்தர்வாதம் உள்ள வேறு சிரைச்சாலை ஒன்றுக்கு தன்னை மாற்ற உத்தரவிடுமாறும் கஞ்சிப்பானை இம்ரான் குறித்த மனுவில் கோரியுள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய, பூச சிறையின் அத்தியட்சர், நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்ட 9 பேர் குறித்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
தற்போது 6 வருட கடூழிய சிறைத் தண்டனையின் கீழ் கஞ்சிபானை இம்ரான் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM