(எம்.நியூட்டன்)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பால் மட்டுமே தமிழர்களுக்கான அரசியல் அபிலாஷைகளை பெற்றுத்தர முடியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கை அரசாங்கத்தின் துணை அரசியல் வாதிகள் அரசியல் தலைவர்கள் அரசியல் கட்சிகள் தமிழர் தாயக பகுதிகளில் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதில் சிலர் சில கட்சி 2009 காலப் பகுதியின் பின்னர் தொடர்ந்து பலமான தமிழ் தேசியத்தின் சிந்தனையுடன் பயணம் செய்யும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அழிக்க வேண்டும் என்று பல வகையான எதிர்ப்பு அரசியல் செய்வது பலரும் அறிந்த விடயம் தமிழினம் விழிப்பாக இருங்கள் தமிழர் சுதந்திரமாக உரிமைகளோடு வாழ வேண்டிய வழிமுறைகள் மேற்கொள்ள தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரியுங்கள்.
எந்த பிரதேசத்தில் இருந்து எந்த தமிழர். தமிழர் தாயக பகுதிகளில் அரசியல் செய்யலாம் அது தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதாக இருக்க வேண்டும்.
மாறாக தமிழ் தேசியத்தின் வழி உருவாக்கம் பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பை அழித்து அரச கட்சிகளையும் அரச கைக்கூலிகளின் கட்சிகளையும் தமிழர் தாயக பகுதிகளில் தமிழ் இனத்திடம் திணிப்பதனை ஒரு போதும் ஏற்க முடியாது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழினம் விழிப்பாக இருங்கள் திட்டமிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அவிழ்க்க அரசு மட்டுமல்ல எம்மவர்களில் சிலரும் அரசின் எலும்புத் துண்டுகளுக்காக களம் இறக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருப்பதன் மூலம் மட்டுமே தமிழர் சுதந்திரமாக வாழ வழி கிடைக்கும் தமிழினத்தின் உரிமைக்காக எவ்வளவோ அற்பணிப்புகளை தமிழினம் செய்துள்ளது தாங்க முடியாத அவலங்களை அனுபவித்தும் உள்ளது. இப்போது பல அரசியல் கட்சிகள் உருவாக்கி தான் தலைமை தனது கட்சி என்ற சுயநல நோக்கத்தில் தமிழினத்தின் ஒற்றுமை சிதைக்கப் பட்டுள்ளது தமிழர் தாயக பகுதிகளில் நிரந்தர தீர்வு அமைதி நிலை உருவாக பல தடைகள் உருவாகி உள்ளது.
தமிழினம் ஒற்றுமையாக இணைந்து சர்வதேசத்திற்கு தங்கள் தேவைகளை கூற வேண்டிய அவசியம் உள்ளது தமிழர் தாயக பகுதிகளில் பிறந்து வளர்ந்த அனைவரும் சிங்களம் தந்த அவலங்களை மறந்துவிட முடியாது.
எனவே தமிழர் தாயக தேசமாகிய வடக்கு கிழக்கு மாகாணங்களில் எம்மவர்களது வலிகளை கண்டு குரல் கொடுத்துவரும் கூட்டமைப்பு என்கின்ற அரசியல் கட்சியால் மட்டுமே தமிழினத்தின் கான விரைவான நீதியை அரசியல் அபிலாஷைகளை பெற உழைக்கமுடியும் பெற்றுத்தர முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM