(செ.தேன்மொழி)
வட்டுக்கோட்டைப் பகுதியில் 124 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரதொல வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் சந்தேகத்திற்கிடமான இரு சைக்கிள்களை சோதனைக்குட்படுத்தியுள்ளதுடன், அவை ஒவ்வொன்றினதும் பின்புறத்தில் இரு பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றை சோதனைச் செய்த பொலிஸார் அதிலிருந்து 124 கிலோ 750 கிராம் கேராளா கஞ்சா தொகைளை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 , 40 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM