124 கிலோ கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: J.G.Stephan

13 Jul, 2020 | 01:09 PM
image

(செ.தேன்மொழி)

வட்டுக்கோட்டைப் பகுதியில் 124 கிலோவிற்கும் அதிகமான கேரளா கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரதொல வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது பொலிஸார் சந்தேகத்திற்கிடமான இரு சைக்கிள்களை  சோதனைக்குட்படுத்தியுள்ளதுடன், அவை ஒவ்வொன்றினதும் பின்புறத்தில் இரு பொதிகள் காணப்பட்டுள்ளன. அவற்றை சோதனைச் செய்த பொலிஸார் அதிலிருந்து 124 கிலோ 750 கிராம் கேராளா கஞ்சா தொகைளை கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த 37 , 40 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35