இலங்கை மலையக மன்றத்தின் பொதுக்குழு கூட்டமும் அதனைத்தொடர்ந்து உயர்மட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும் இன்று (12) காலை இலங்கை மலையக மன்றத்தின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் பல முக்கிய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
இலங்கை மலையக மன்றத்தின் தலைவர் சிவன் ரவிசங்கர், எதிர்கால திட்டங்கள் குறித்தும், கொள்கைகள் குறித்தும் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து மன்றத்தின் செயலாளர் சுப்பையா வசந்தராஜ், இலங்கை மலையக மன்றத்தின் செயற்பாடுகள் குறித்து கருத்துக்களை வெளியிட்டார்.
அதன் பின்னர் இலங்கை மலையக மன்றத்திற்கான தேசிய அமைப்பாளராக பொறியியலாளரும், முன்னாள் மாத்தளை மாவட்ட அமைப்பாளருமான ராசையா பிரதீப்குமாரும் ஊடகம் மற்றும் பரப்புரைக்கான பொறுப்பாளராக முன்னாள் நுவரெளிய மாவட்ட பொறுப்பாளர் ஆதிசிவம் அஜந்தனும் நியமிக்கப்பட்டனர்.
மேலும் மாத்தளை மாவட்டத்திற்கு புதிய அமைப்பாளராக புஷ்பகுமாரும்,பெண்கள் பிரிவின் பொறுப்பாளராக முன்னால் மக்கள் தொடர்பாளரும், நுவரெலியா மாவட்ட பெண்கள் பிரிவின் பொறுப்பாளருமான ரேகா ராஜேந்திரன் அவர்களும், பிரதி பொருளாளராக முன்னால் இரத்தினபுரி பெண்கள் பிரிவின் தலைமை பொறுப்பாளர் விஷ்னுகுமார் தனுஷா அவர்களும், அச்சக பொறுப்பாளராக மெடோலினா அவர்களும், நுவரெளிய மாவட்டத்திற்கு புதிய அமைப்பாளராக விஜயகாந்தும் நியமிக்கப்பட்டனர்.
இறுதியாக இலங்கை மலையக மன்றத்தின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் தமது கிளைகள் குறித்த செயற்பாடுகள் தொடர்பிலும், எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இன்றைய ஒன்றுகூடல்களில் மலையக மக்கள் வாழும் பல பகுதிகளைச் சேர்ந்த உயர்மட்ட உறுப்பினர்கள் உட்பட இலங்கை மலையக மன்றத்தின் தலைவர், செயலாளர் என பல உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM